Monday 4 November 2019

அமைச்சருடன் சந்திப்பு...

04/11/2019 அன்று டெல்லியில் இலாக்கா அமைச்சர் 
திரு.இரவிசங்கர் பிரசாத் அவர்களுடன் அனைத்து சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. சங்கத்திற்கு இருவர் வீதம் அனைத்து சங்கப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். NFTE சார்பில் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்களும், தோழர்.ராஜ்மெளலி அவர்களும் கலந்து கொண்டனர். DOT செயலர், BSNL மனிதவள இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் கூறியவை....

இந்திய தேசத்தில் இதுவரை எந்தவொரு பொதுத்துறைக்கும் 
இல்லாத அளவிற்கு BSNL நிறுவனத்திற்கு புத்தாக்கத் திட்டம் 
அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பில் அரசுத்துறையின் பங்கு இருக்க வேண்டும் என்ற உறுதியான நிலைபாட்டின் அடிப்படையில் பிரதமர் மற்றும்
உள்துறை அமைச்சர் ஆகியோரின் விருப்பத்துடன் புத்தாக்கத்திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

புத்தாக்கத்திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி விரைவிலேயே BSNL லாபம் ஈட்டும் பொதுத்துறையாக மீண்டும் மீண்டுவரும் என்ற நம்பிக்கை அரசுக்கு உண்டு.

BSNL விரைவிலேயே தனது அசையாச்சொத்துக்களைப் பணமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு கிட்டும் பணம் முழுக்க முழுக்க BSNL வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

புத்தாக்கத்திட்டத்தின் முக்கிய அம்சமாக ஊழியர்களுக்கு 
விருப்ப ஓய்வுத்திட்டம் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இதுவரை எந்தவொரு துறையிலும் இவ்வளவு பலன்தரக்கூடிய திட்டம் ஊழியர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

புத்தாக்கத்திட்டத்தின் வெற்றி விருப்ப ஓய்வுத்திட்டத்தை 
முழுமையாக அமுல்படுத்துவதில்தான் அடங்கியுள்ளது.

களத்தில் உள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத்திட்டம் முழுமையாக விளக்கப்பட வேண்டும். ஊழியர் மனங்களில் உள்ள சந்தேகங்களுக்கு உரிய முறையில் விளக்கம் அளிக்கப்படவேண்டும்.

புத்தாக்கத்திட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சங்கங்கள் எழுப்பிய கோரிக்கை...

விருப்ப ஓய்வு என்பது கட்டாயமாக்கப்படக் கூடாது. ஊழியர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.

ஓய்வு பெறும் வயது 60ல் இருந்து 58ஆகக் குறைக்கப்படும் என்ற
சந்தேகத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

விருப்ப ஓய்வுக்காக கொடுக்கப்படும் பணப்பலன் மீது வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.

இதுவரை BSNL அளித்து வரும் கூடுதல் ஓய்வூதியப்பங்களிப்பை
DOT திருப்பி அளிக்க வேண்டும்.

நாடுமுழுக்க 4G உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதால் BSNLக்கு உடனடியாக 4G அலைக்கற்றை வசதியை வழங்க வேண்டும்.

BSNL குடியிருப்பில் உள்ள ஊழியர்கள் விருப்ப ஓய்வில் சென்றாலும் தொடர்ந்து குடியிருப்பில் வசிக்க அனுமதிக்க வேண்டும்.

01/01/2017 அன்று 119.5 சத IDAவை அடிப்படைச்சம்பளத்துடன் இணைக்க வேண்டும்.

3வது ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றம் ஆகியவை அமுல்படுத்தப்பட வேண்டும்.

சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் புத்தாக்கத்திட்டம் மற்றும் விருப்ப ஓய்வுத்திட்டம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்ட பின் ஊழியர் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டாலும் புத்தாக்கத்திட்டம் மற்றும் விருப்ப ஓய்வுத்திட்டம் எவ்வாறு வெற்றிகரமாக அமுலாக்கப்படுகின்றது என்பதைப் பொறுத்தே அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என்பதை அமைச்சர் சந்திப்பில் இருந்து 
நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தோழர்கள்... இனி தங்களுக்கான விருப்ப ஓய்வு பணப்பலன் கணக்குகளைக் கணக்கிடுவதில் காலத்தைச் செலவிடலாம்.

Tuesday 3 September 2019

தேர்தல்


                                             


Tuesday 23 July 2019

இன்று (23/07/19) மதியம் நான் கிண்டியில் நடந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று விட்டு சங்க அலுவலகத்திற்கு திரும்புகையில் புதுடில்லியில் உள்ள வட்டார தொழிலாளர் ஆணணயர் ( Regional Labour Commissioner) அலுவலகத்தில் இருந்து என்னிடம் செல்பேசியில் தொடர்பு கொண்ட ஒரு அதிகாரி பதட்டத்துடன் பேசினார். அவர் என்னிடம் மத்திய தொழிலாளர் அமைச்சர் அவர்களிடம் உங்கள் NFTCL சம்மேளனம் சில தினங்களுக்கு முன்பு கொடுத்த புகார் கடிதத்தின் மீது தேவையான உடனடி நடவடிக்கை எடுக்க RLC புதுடெல்லி அவர்களுக்கு அமைச்சர் சந்தோஷ் கேங்வார் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் எதிர்வரும் 26-07-2019 ( வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் RLC அவர்கள் தங்களுடனும் பிஎஸ்என்எல் நிர்வாகத்துடனும் ஆலோசனை கலக்க கூட்டம் ஒன்றை அழைத்துள்ளார். இந்த கூட்டத்தில் தாங்களும் NFTCL சம்மேளனத்தின் சார்பில் மூவரும் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நமது தேசிய தலைவர் ஆஷிக் அஹமது அவர்களுடனான ஆலோசனைக்கு பிறகு கீழ்க்கண்ட நான்கு தோழர்கள் டில்லியில் ஜுலை 26 ல் RLC கூட்டியுள்ள முத்தரப்பு கூட்டத்தில் பங்கேற்க தீர்மானிக்கப்பட்டது.
1) தோழர் ஆஷிக் அஹமது( தேசிய தலைவர்)
2) தோழர் சி.கே.எம் ( பொதுச் செயலாளர்)
3) தோழர் ஆனந்தன் ( தமிழ்நாடு மாநிலச் செயலாளர்)
4) தோழர் சர்மா ( டில்லி மாநிலச் செயலாளர்)
மத்திய அமைச்சர் சந்தோஷ் கேங்வார் அவர்களின் துரித நடவடிக்கைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். பல மாதங்களாக சம்பளம் பெறாது துன்பக்கடலில் மூழ்கி இருக்கும் பாவப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என உறுதியாக நம்புகிறேன்.

Sunday 30 June 2019

வாழ்த்துக்கள்


30.6.2019 இன்று க்க இருப்பவை பணி நிறைவு..
பணி நிறைவு பெறும்  அன்பு தோழர்

1.M.ARIVAZHAGAN                SDE           TNJ
2.R.MYTHILI                              OS(P)        TNJ
3.P.ANANDARAJ                         TT           KDV
4.M.LAKSHMANAN                   TT           AMB
5.M.RAJENDRAN                        SDE         MNG
6.M.MOHAMED YASSIN           OS(P)       MNG  
7.R.JOTHI                                      SDE         TNJ
8.S.SIVASANKARAN                   TT            MTU
9.N.VASUKI                                  OS(P)        TVN
10.R.SUNDARARAJU                   TT
11.H.H.VASANTHAKUMAR        OS(P)       TNJ
12.S.PALANIVELU                         TT           MNG
13.S.NEPOLEON                             OS(P)      TVN
14.P.KALIYAMOORTHY                TT           MNG
15ERUTHAYA KAMALANATHAN  AO       TNJ 

      அவர்களின் பணி நிறைவுக்காலம் 
இனிமையாய் விளங்கிட  தஞ்சை மாவட்ட NFTE & NFTCL மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
       
வாழ்க... பல்லாண்டு...


Monday 24 June 2019

NFTCL சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இன்று நமது பொதுச்செயலர் சி.கே.மதிவாணன் ( General Secretary of NFTCL ) மற்றும் செயல் தலைவர் தோழர்.ராமகிருஷ்ணனும் ( NFTCL ) கோவை மூத்த வழக்கறிஞர் குணாலன் அவர்களை சந்தித்தனர். அப்போது ஒப்பந்த தொழிலாளர்களூக்கு மாதந்தோறும் 7ம் தேதி சம்பளம் வழங்காத தலைமை பொது மேலாளர்கள் தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைபேசியை எதிர்த்தும் உடனே நான்கு மாத சம்பளத்தை வழங்கக் கோரியும் வழக்கு தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வரும் திங்கட்கிழமை வழக்கு தொடர இருப்பதால் மாநிலச் செயலர் தோழர்.ஆனந்தன் கடலூரிலிந்து சென்னைக்கு அதற்கு தேவையான தஸ்தாவேஜ்களுடன் புறப்பட்டு வந்தார்.

எப்படியும் சம்பளமின்றி தவிக்கும் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் மற்றும் கேசுவல் ஊழியர்களுக்கு சம்பளம் வாங்கித் தருவது நமது கடமை. 

இதுவரை தர்ணா, வாயில் கூட்டங்கள் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் செய்தும் எந்த பயணும் விளையாத காரணத்தால் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவதைத் தவிர  வேறு வழியில்லை என்பதால் இந்த முறை நீதிமன்றத்தை அணுகுகிறோம்.

நிரந்தர ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் நிர்வாகம் சாதாரண அடிமட்ட தோழர்களுக்கு சம்பளம் தராமல் இழுக்கடிப்பது நியாயமா?
Image may contain: 3 people, people smiling, people sitting

Friday 31 May 2019

வாழ்த்துக்கள்



31.05.2019 இன்று க்க இருப்பவை பணி நிறைவு..
பணி நிறைவு பெறும்  அன்பு தோழர்


  • 1.A.CHANDRAN                           TT    THANJAVUR
  • 2.S.NANTHAKUMAR                   TT    THANJAVUR
  • 3.L.ARIVALAGAN                        TT    THANJAVUR
  • 4.P.SELVARAJ                                TT    THANJAVUR
  • 5.K.BALATHANDAYUTHAM      TT    TIRUVARUR
  • 6.S.KALAISELVAN                        TT    TIRUTHURAIPUNDI
  • 7.C.VIJAYAKUMARAN                 TT    TIRUTHURAIPUNDI
  • 8.N.RAMALINGAM                       TT   TIRUVARUR
  • 9.M.PANDIAN                                TT    MANNARGUDI
  • 10.D.ANBAZHAGAN                    TT    ONT
  • 11.K.SIVAPRAKASAM                 TT    TIRUVARUR

      அவர்களின் பணி நிறைவுக்காலம் 
இனிமையாய் விளங்கிட  தஞ்சை மாவட்ட NFTE & NFTCL மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
       
வாழ்க... பல்லாண்டு...












தொழிலாளர் கல்வி மையத்தின் மாநாடு

Image may contain: 5 people, including Ragul Anandhan, people standingImage may contain: 11 people, including Sundara Moorthy, people standing, crowd and outdoorImage may contain: 6 people, people standingImage may contain: 6 people, including Thamarai Anbazhagan and Subbarayan Lakshman, people on stage, people standing, people sitting, shoes and indoor
Image may contain: 4 people, including Thamarai AnbazhaganImage may contain: 8 people, crowdImage may contain: 6 people, including Kamaraj Sengulathan and Nallusamy Veeramalai, crowd and indoorImage may contain: 10 people, including Natarajan RamakrishnanImage may contain: 8 people, including Ragul Anandhan, crowdதூத்துக்குடியில் நேற்று நிறைவு பெற்றது .இந்த மாநாட்டில் ஒருமனதாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியான மனிதகுல மாமேதை காரல் மார்க்ஸ் கல்வி அறக்கட்டளை நீதி வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் ஒப்பந்த ஊழியர்களின் குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்காக ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. நல்ல தலைமையின் கீழ் , நல்ல திசை வழியே நமது சங்கம் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை மேன்மேலும் சுட்டிக்காட்டும் விதமாக இந்த நிகழ்வு நடந்தேறியது. ஏனென்றால் அன்று தானே புயல் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒப்பந்த ஊழியர்களின் சிரமத்துக்குள்ளாகி என்பது அனைவரும் அறிந்த விஷயம்.ஒப்பந்த ஊழியர்கள் தவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாதது நமது தோழர் C .K. மதிவாணனின் தலைமை அன்றும் நிரந்தர ஊழியர்களிடம் வசூலித்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை அந்த பகுதிகளில் வாடிய ஒப்பந்த ஊழியர்களுக்கு பகிர்ந்தளித்து .அதே தலைமை தான் இன்றும் நான்கு மாதங்களாக சம்பளம் இல்லாமல் சிக்கித்தவிக்கும் ஒப்பந்த ஊழியர்களின் வாரிசுகளின் படிப்பு செலவுக்காக உதவி இருக்கிறது. சந்தாவில் ஆரம்பித்து நன்கொடை ,வழக்கு நீதி என்று பல்வேறு நிதிகளுக்கு பெயர் சூட்டி ஒப்பந்த ஊழியர்களிடமிருந்து வசூலித்துத் கொண்டிருக்கும் பல்வேறு சங்கங்களுக்கு மத்தியில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிதியை கொடுத்து அவர்களின் துயர் துடைக்கும் ஒரே சங்கம் தான் நமது தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம் .பெற்றவர் மகிழ்வை விட கொடுத்தவர் மகிழ்வே அதிகம் அவையில் அது அரங்கேறியது என்றால் அது மிகையாகாது.இந்த அறக்கட்டளை நிதியாக தந்து உதவிய அனைத்து நல்ல உள்ளங்களையும், இந்த அறக்கட்டளையை நிறுவிய நமது பொதுச் செயலாளர் C.K.மதிவாணன் அவர்களுக்கும் இதற்கான நிதி வசூலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயல்பட்ட தோழர் எல் சுப்பராயன் அவர்களுக்கும் மற்றும் இந்த ஏற்பாட்டினை செய்த தூத்துக்குடி தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியை NFTCL மாநில சங்கத்தின் சார்பாக உரித்தாக்குகிறோம்.மீண்டும் ஒரு முறை நமது தலைமை , நமக்கு நல்ல வழிகாட்டியாய் இருக்கிறது என்ற மகிழ்வோடு .
Image may contain: 6 people, including Ragul Anandhan and Subbarayan Lakshman, people smiling, people standing

Image may contain: 8 people, including Natarajan Ramakrishnan and Babu Varadharaj, people smiling, people standing
Image may contain: 8 people, including Babu Varadharaj, Subbarayan Lakshman and Natarajan Ramakrishnan, people standing
Image may contain: 8 people, including Babu Varadharaj and Thamarai Anbazhagan, people standing
Image may contain: 7 people, including Babu Varadharaj and Ragul Anandhan, people standing
Image may contain: 6 people, including Chitru Arasu, Natarajan Ramakrishnan, Babu Varadharaj and Thamarai Anbazhagan, people standing

Image may contain: 6 people, including Babu Varadharaj, people standing and shoes


Image may contain: 7 people, people standing

Image may contain: 7 people, including Babu Varadharaj, people standing
Image may contain: 5 people, including Ragul Anandhan and Thamarai Anbazhagan, people standing and shoes
Image may contain: 7 people, including Subbarayan Lakshman and Babu Varadharaj, people standing and shoes

Image may contain: 6 people, including Subbarayan Lakshman and Babu Varadharaj, people standing and shoes

Image may contain: 6 people, including Panneer Selvam and Babu Varadharaj, people standing

Image may contain: 3 people
Image may contain: 13 people, including Arockia Doss, Panneer Selvam and Ragul Anandhan, people standing

Image may contain: 15 people, including Arockia Doss, Barathan Subramaniyan, Raja Ram, Ragul Anandhan and Panneer Selvam, people smiling
Image may contain: 6 people, people standing

Monday 29 April 2019

வாழ்த்துக்கள்


வாழ்த்துக்கள்
30.04.2019 இன்று க்க இருப்பவை பணி நிறைவு..
பணி நிறைவு பெறும்  அன்பு தோழர்

1.S.ELANGOVAN         OS   THANJAVUR
2.D.KALAISELVAN     TT    THANJAVUR
3.K.SUBRAMANIAN    TT   THANJAVUR
4.M.DURAIRAJ             TT    THANJAVUR
5.C.SELVARAJ  11        TT    THANJAVUR
6.V.KAMAKODI            OS    THIRUVARUR
7.V.RAVI                         TT     PATTUKOTTAI
8.S.SEKAR         11          TT    THIRUVARUR
9.M.PARTHASARATHI TT    THIRUVARUR
10.P.BALAKRISHNAN  TT     MANNARGUDI
11.RAJARAM                  DGM THANJAVUR

      அவர்களின் பணி நிறைவுக்காலம் 
இனிமையாய் விளங்கிட  தஞ்சை மாவட்ட NFTE & NFTCL மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
       
வாழ்க... பல்லாண்டு...





வாழ்த்துக்கள்
                                                                       NFTCL
                                               தஞ்சாவூர்
தோழர்.S.இளங்கோவன் மாவட்ட செயலாளர் NFTCL  அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா தஞ்சையில் CTO வளாகத்தில் தோழர்.K.நீலமேகம் NFTCL கிளை தலைவர் தலைமையில் நடைப்பெற்றது. விழாவில் NFTCL மாவட்ட தலைவர் பிரின்ஸ், NFTE மாவட்ட தலைவர் T.பன்னீர்செல்வம் தஞ்சை
NFTE மாவட்ட பொருளர் A.சேகர் திருவாரூர்
NFTCL மாநில செயலர் S.ஆனந்தன் கடலூர்,    தோழர் பிராபகரன் AIBSNL EA மாவட்ட செயலாளர் ,தோழர் குணசேகரன் SEWA மாநில பொறுப்பாளர் மற்றும் NFTE மாநில பொறுப்பாளர், NFTE கிளை செயலர்கள் NFTE மாவட்ட நிர்வாகிகள் NFTCL கிளை சங்க பொறுப்பாளர்கள் ,ஒப்பந்த ஊழியர்கள் 122 பேர்கள் கலந்து கொண்டனர் .
அதன் நிகழ்வுகள்