Tuesday 9 September 2014

தற்கொலையை தவிர்ப்போம்' உலக தற்கொலை தினம் நாளை 10 ஆம் தேதி
 தற்கொலை செய்வதை தவிர்த்துக்கொள்வோம் ஒருவருடன் ஒருவர் தொடர்பு பட்ட உலகம்என்பது இவ்வருட உலக தற்கொலை தினத்தின் தொனிப் பொருளாகும்.
இத்தினம் நாளை 10 ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொள்வோருள் அநேகருக்கு மனநோய்களும், மன அழுத்தங்களும் காணப்படுகின்றன.
மானசீக உபாதைகளுக்கான சிகிச்சைகள் மிகவும் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றன. இருந்த போதும் மானசீக நோய்களுக்கு சிகிச்சை பெறுவதைப் பொறுத்தவரை குறைவாகவே அவதானம் செலுத்தப் படுவதாகவும் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.