Tuesday 16 September 2014

செய்திகள்



செய்திகள் 

ஓய்வு பெறப்போகும் தோழர்களது ஓய்வூதிய விண்ணப்பங்கள்  
ஆறு மாதங்களுக்கு முன்பே  DOT CELLக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது ஓய்வூதிய விதி. எனவே 31/03/2015க்குள் ஓய்வு பெறப்போவோரின் விண்ணப்பங்கள் 26/09/2014க்குள் DOT CELL க்கு அனுப்பப்பட வேண்டும் என BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.

காஷ்மீர் வெள்ளத்தை முன்னிட்டு  21/09/2014 வரை இலவசமாக பேசுவதற்கும், SMS அனுப்புவதற்கும் BSNL வசதி செய்துள்ளது
BSNL ஊழியர்களின் பங்காக ஒரு நாள் சம்பளத்தை நிவாரண நிதிக்கு பிடித்தம் செய்யக்கோரி  நிர்வாகத்திடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
MTNL - BSNL  இணைப்பு சூடு பிடித்துள்ளது
பங்கு விற்பனை செய்யப்பட்ட MTNLன் பங்குகளை திரும்ப பெறுவதா
அல்லது BSNL பங்குகளை விற்பனை செய்வதா
என்று  DOT தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றது.