அருமைத்தோழர்களே தபால் தந்தி, ரயில்வே, பாதுகாப்பு பிரிவு ஊழியர்கள் இணைந்து 1968,செப்டம்பர் 19 அன்று நடத்திய ஒரு நாள்வேலை நிறுத்தம்தான் தியாகிகள்தினமாகக் கொண்டாடப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க
இவ்வேலைநிறுத்தத்தின் கோரிக்கைகள்:
*தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம் அளித்திட வேண்டும்.
* கிராக்கிப்படியை சம்பளத்துடன் இணைத்திட வேண்டும்.
*DA FORMULA மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
இதைஅறிவித்து வேலைநிறுத்தம் துவங்குவதற்கு முன்னமேயே, தலைவர்களைக் கைது
இதைஅறிவித்து வேலைநிறுத்தம் துவங்குவதற்கு முன்னமேயே, தலைவர்களைக் கைது
செய்யும்நடவடிக்கையை மத்திய அரசு துவக்கிவிட்டது. டெல்லியில் உள்ள அனைத்து
P&T நிர்வாகபகுதிகளில் 18 ம் தேதிகாலை 11 மணிக்கே வேலை நிறுத்தம் துவங்கி விட்டது.
டெல்லியில்மட்டும்
1650 P T ஊழியர்களும் 350 மற்ற பிரிவு ஊழியர்களும் கைது ஆனார்கள்.
P
&Tதோழர்கள் 4000 பேர் உள்ளிட்ட 10000 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலை நிறுத்தத்தில் 280000 பேர் கலந்து கொண்டனர் . 140000 ஊழியர்கள்.கைதாகினர். 8700
பேர்சஸ்பென்ட்செய்யப்பட்டனர்.இதில்P&Tதோழர்கள்3756பேர்.44000தற்காலிகஊழியர்களை Termination செய்ய நோட்டிஸ்கொடுக்கப்பட்டது. இப்படி பட்ட அடக்குமுறை எந்த ஒரு ஜனநாயக
நாட்டிலும் இது போன்ற கடுமையானபழிவாங்கல் நடவடிக்கை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் நடைபெற்றதில்லை.
பிகானிர், பதான்கோட், பொங்கைகான் ஆகியவிடங்களில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு9 ரயில்வே தொழிலாளிகள்பலியானார்கள். பல இடங்களில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன.கூட்டுநடவடிக்கைக் குழு அரசிடம் பழிவாங்கலைக்கைவிடக்கோரியும் அசையாததால் விதிப்படிவேலை போராட்டத்தை துவங்கியது.
இந்த எழுச்சிமிக்க போராட்டம் தொழிற்சங்கங்களை எல்லாம் ஒன்று படுத்தஉதவியது. தொழிலாளர்
சக்தியை அரசும் உணரத் துவங்கியது.எதிர்காலப்போராட்டங்களுக்கு உந்து சக்தியாக விளங்கிய
செப் 19 போராட்டதியாகிகளுக்கு நமதுதஞ்சைமாவட்டசங்கம் வீர வணக்கத்தைஉரித்தாக்குகிறது.
செப் 19-போராட்ட
தினமும்
தியாகிகள்
தினமாக
கொண்டாடப்படுகிறது.
அதன்
46வது
ஆண்டான
இந்த
செப்டம்பர்-19
காலகட்டத்தில்
BSNLஐ
அழிக்க மத்திய
BJP அரசும்
கார்ப்பரேட்
கம்பனிகளும்
கைகோர்த்துள்ளன.
என்வே
FORUM மற்றும்
JAC அமைப்புகள்
பல
போராட்ட
அறைகூவல்களை
விடுத்துள்ளன.செப்டம்பர்-19
தியாகிகளால்
நம்
இயக்கம்
வளர்ந்துள்ளது
எனபதை
நினைவில்
கொண்டு
நாமும்
BSNLஐ
பாதுகாக்க
போராட்ட
பதாகையை
உயர்த்திப்
பிடிபோம்.
ஒன்றுபடுவோம்
! போராடுவோம் !! வெற்றி
பெறுவோம்!!!.