என்.எல்.சி ஒப்பந்த
தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பு
45 நாட்களாக போராடும்
என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக நிரந்தர தொழிலாளர்கள்
அறிவித்துள்ளனர்.
நெய்வேலியில்
நடைபெற்ற நிரந்தர
பணியாளர்கள் தொழிற்சங்கத்தின் அவசரக் கூட்டத்தில்
இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி
வரும் 19ஆம் தேதி இரவு 10 மணி முதல் 20 ஆம் தேதி 10 மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குள் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.