Wednesday 5 November 2014

 வாழ்த்துவோம் ! மனம் மகிழ்ந்து  !!

கரூரில் தோழர்களை சந்தித்தபோது, நம் அனைவரையும் 
மகிழ்விக்கும் செய்தியை அறிந்தோம். கரூரில் SDEயாக பணியாற்றும் 
நம் அனைவருக்கும் பரிச்சயமான தோழர் விமலாதித்தன் அவர்கள் 
"வாசிப்பதை சுவாசிப்போம்"  

என்ற லட்சிய  நோக்கத்தோடு கரூர் மாவட்டத்தில்   
ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்களை 
நல்ல நூல்களை வாசிக்கும் நற்செயலுக்கு ஈர்ப்பது, 

இளைஞர்களை IAS IPS தேர்வு எழுதிட பயிற்றுவித்து  தேர்ச்சிபெற வைத்தது, அப்பணியை தொடர்வது போன்ற நற்செயல்களை பாராட்டி ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவின்போது, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் (மாவட்ட கலெக்டர்)   சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்த செய்தியை அறிந்து மகிழ்ந்தோம்.
 அனைவரும் அறிய இச்செய்தியை வெளியிடுவதில் 
பெருமை கொள்கிறோம்