Thursday 11 December 2014

தமிழ்நாட்டில் மின் கட்டணம் 15% உயர்த்தப்பட்டு உள்ளது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. மின்கட்டண உயர்வு நாளைமுதல் அமலுக்கு வருவதாகவும் ஆணையம் அறிவித்துள்ளது. 

கட்டண உயர்வு விவரம் 


நிலையான கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் 100 யூனிட் ஒன்றுக்கான கட்டணம் ரூ.2.60ல் இருந்து ரூ.3 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 100 யூனிட்டுக்கு மேல் 200 யூனிட் வரை யூனிட் ஒன்று ரூ.2.60ல் இருந்து ரூ.3.25 ஆகிறது. 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் ரூ.30 நிலையான கட்டணம் ரூ.40 ஆகிறது. 201 முதல் 500 யூனிட் வரை யூனிட் ஒன்று ரூ.4ல் இருந்து ரூ.4.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 501 யூனிட்டிலிருந்து அதற்கு மேல் யூனிட் ரூ.5.75ல் இருந்து ரூ.6.60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.