Saturday 14 March 2015

பி.எஸ்.என்.எல் தொழிற்சங்கங்கள் நோட்டீஸ் ஏப்ரல் 21, 22 தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தம்



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 21, 22ம் தேதிகளில் நடத்த உள்ள வேலைநிறுத்தத்திற்கு முறைப்படியான அறிவிக்கையை நிர்வாகத்திடம் தொழிற்சங்கங்கள் வழங்கியுள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் எம்டிஎன்எல் நிறுவனத்தை இணைக்கக் கூடாது, பிஎஸ்என்எல் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவையான நிதி உதவிகளை அளிக்க வேண்டும், தனியார் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு விதிக்கப்பட் டுள்ள கட்டுப்பாடுகளை தவிர்க்க வேண்டும், தனியாருக்கு சாதகமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தகவல் கோபுர சேவைகளை பிரித்து தனி நிறுவனமாக்க கூடாது, காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு சேவைகளை வலியுறுத்தி  பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஏப்ரல் 21, 22ம் தேதிகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான முறைப்படியான அறிவிக்கையை நேற்று பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவாவிடம் நேற்று வழங்கினர்.

அதேபோல் தொலைத் தொடர்புத்துறை செயலாளர், தலைமை தொழிலாளர் ஆணையர், தொலைத் தொடர்புத்துறை அமைச்சர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சரிடமும் வழங்கினர். வேலை நிறுத்த அறிவிக்கையில் அதிகாரிகள், ஊழியர்களுக்கான 15 சங்கங்களின் நிர்வாகிகள் கையெழுத்திட்டிருந்தனர்.
12.03.15-FORUM  டெல்லியில் வேலை நிறுத்த நோட்டீஸ்... 
அருமைத் தோழர்களே ! 12.03.15-அன்று நமது FORUM சார்பாக டெல்லியில்  வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது ... இங்கே கிளிக் செய்யவும்.