Sunday 20 September 2015

குடந்தைமாவட்ட மாநாடு






குடந்தைமாவட்ட மாநாடு வெற்றிபெற

தஞ்சைமாவட்ட சங்கத்தின் சார்பான வாழ்த்துக்கள்!



மத்திய அரசு ஊழியர்கள் இயக்க வரலாற்றில் எவராலும் மறக்க இயலாத நாள். 

மத்திய அரசு 3 ஆம் ஊதிய குழுவை அமைத்த போது அதன்  செயல்பாட்டு 
வரைமுறை குறிப்பில் " தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியத்தை " 
சேர்க்க மறுத்தது. ஆகவே, தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம், பஞ்சபடியை அடிப்படைசம்பளத்துடன் இணைத்தல் , பஞ்சப்படி வழங்குவதற்கான விதிமுறைகளை முதலிய  9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெற்றது. 

அரசு கடுமையான அடக்குமுறைகளை ஏவியது. அரசின் திமிர்த்தனமும், 
ஊழியர்களை துச்சமென மதிக்கும் போக்கும் ஊழியர்களை  மேலும் கொதிப்படைய செய்தது.

வேலை நிறுத்தம் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் 9 தோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். 10,000 மேற்பட்டோர் suspend செய்யப்பட்டனர். 3,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 8,000 பேர் கைது செய்யப்பட்டனர். Casual .ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சேவை முறிவு, தொலைதூர இட மாற்றம் , பதவி இறக்கம் முதலான நடவடிக்கைகள் தொடர்ந்தன.அன்றைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாத்பாய் அவர்களின் கண்டன உரை நாடாளுமன்றத்தை உலுக்கியது.