Friday 18 September 2015

JTO ஆளெடுப்பு விதி 
திருத்தங்கள்  ஒப்புதல் 

இன்று 18/09/2015 நடைபெற்ற BSNL வாரியக்கூட்டத்தில்  

JTO ஆளெடுப்பு விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு 

ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நமது 

NFTE மத்திய சங்கம் தெரிவித்துள்ளது.



17/09/2015 அன்று CMDஐ சந்தித்த 

நமது சங்கத்தலைவர்கள்  ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் கிடந்த மேற்கண்ட ஆளெடுப்பு விதி திருத்தத்திற்கு உரிய ஒப்புதல் அளிக்க கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.


இன்றைய கூட்டத்தில்...

JTO ஆளெடுப்பு விதிகளில் மேற்கொள்ளப்பட்ட
 திருத்தங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும்...


JTO இலாக்காத்தேர்வு எழுத தற்போதுள்ள 
7 ஆண்டு சேவைத்தகுதி என்பது 
5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதாகவும்...

இவற்றுக்கெல்லாம் மேலாக 


மிக நீண்ட நாட்களாக 


 அகலிகையாக காத்திருக்கும் 

 JTO தற்காலிகப் பதவி வகிக்கும் 

நமது TTA தோழர்களை

நிரந்தர  JTOவாக நிரந்தரம் செய்யவும் 

ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மிக நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற
தொடர் முயற்சி செய்த நமது மத்திய சங்கத்திற்கு நன்றிகள்.