சென்னை: சென்னையில் பெய்து வரும் கன மழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடானது. தாழ்வான பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலைகள், சுரங்கப்பாதைகளிலும் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர். வாகனங்கள் மெதுவாக செல்வதால் சென்னையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.