Tuesday 25 August 2015

வாழ்த்துக்கள்



TTA இலாக்காத்தேர்வு முடிவுகள் 

07/06/2015 அன்று நடைபெற்ற 
TTA இலாக்காத்தேர்வு 
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

தமிழகத்தில் உள்ள  439 காலியிடங்களுக்கு 
74 தோழர்கள் மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர்
இரண்டு தோழர்களின் முடிவுகள் 
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் 
தேர்ச்சி பெற்றுள்ள கீழ்க்கண்ட 
தோழர்.G.குணசேகரன்திருவாரூர்SDOT                            (கூடூர் குணா கிளைச்செயலர்)
வெற்றி பெற்ற தோழர்களுக்கு 
நமது தஞ்சை மாவட்டச்சங்கம்
   மனமார்ந்த வாழ்த்துக்கள்...


Monday 24 August 2015

செய்திகள்



புதிய போனஸ் வரையறையை உருவாக்குவதற்கான 
போனஸ் குழுக்கூட்டம்  31/08/2015 அன்று
 டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
NFTE சார்பில் தோழர்.இஸ்லாம் அவர்களும், 
BSNLEU சார்பில் தோழர்.அபிமன்யு அவர்களும் கலந்து கொள்வார்கள்.
===============================================
மாநில நிர்வாகங்கள் தங்கள் பகுதிகளில் 
SIM பற்றாக்குறை இருப்பின் 
உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என 
டெல்லி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 
===============================================
DELOITTEE குழு பரிந்துரையின்படி 
SSA எனப்படும் மாவட்ட அமைப்புக்கள் BUSINESS AREA எனப்படும் அமைப்புக்களாக உடனடியாக மாற்றப்பட வேண்டும் என 
டெல்லி நிர்வாகம் UP/MP உள்ளிட்ட 
10 மாநில நிர்வாகங்களை துரிதப்படுத்தியுள்ளது. 
தமிழகம் அடுத்த கட்ட நடவடிக்கையில் இருக்கலாம்.
===============================================
01/01/2007க்குப்பின் பணியில் அமர்த்தப்பட்ட 
TTA அல்லாத  ஊழியர்களின் சம்பள இழப்பை ஈடு கட்ட 
நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றது.
===============================================
பதவிகளின் பெயர் மாற்றப் பரிந்துரையை BSNL நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என வதந்திகள் பரவின. 
நமது மத்திய சங்கம் இதை மறுத்ததுடன்,  குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கப்படும் என உறுதியாக கூறியுள்ளது.
===============================================
வழக்கம்போல் இந்த ஆண்டும் VRS வதந்தி பரவியது. 
ஆனால் தற்போதைய நிதி சூழலில்.. அரசிடமிருந்து நிதி உதவி கிடைக்காத வரையில் விருப்ப ஓய்வு  என்பது சாத்தியமில்லை 
என BSNL அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளது.
===============================================
7வது ஊதியக்குழு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் 
இதனால் அரசுக்கு 16 சத கூடுதல் ஊதிய சுமை ஏற்படும் எனவும் 
அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Wednesday 19 August 2015

மாநிலச்செயலர்கள் கூட்ட முடிவுகள்



     
நமது NFTE  சங்கத்தின் மாநிலச்செயலர்கள் கூட்டம்
 டெல்லியில் ஆகஸ்ட் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெற்றது. கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
============================================
தேசம் முழுவதுமுள்ள BSNL  செல் கோபுரங்களைத்தனியாகப் பிரித்துபுதிய துணை நிறுவனம் ஏற்படுத்த முயற்சிக்கும்  அரசின் மோசமான முடிவை எதிர்த்து அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து  போராட்டக்களம் காண மத்திய சங்கம் முழு முயற்சி செய்ய வேண்டும்.
============================================
BSNL நிறுவனத்தை சீர்குலைக்கும் மற்றொரு முயற்சியாக நமது அகன்ற அலைவரிசை இணைப்புகளில் உருவாகும் பழுதுகளை நீக்கும் பணியை சில குறிப்பிட்ட மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் தனியாருக்கு விடுவதற்கு எத்தனிக்கும் நிர்வாகம் தனது ஊழியர்கள் மீது நம்பிக்கை வைத்து மேற்கண்ட மோசமான முடிவைக் கைவிட வேண்டும்.
============================================
DELOITTEE  குழு பரிந்துரையின் பாதகங்களை மாநிலச்செயலர்கள்  கூட்டம் விரிவாக விவாதித்தது.  DELOITTEE  குழு பரிந்துரை அமுலாக்கத்தில்  எந்தவொரு இறுதி முடிவு எடுப்பதற்கும்   முன்பு சங்கங்களைக் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே முடிவுகளை அமுலாக்க வேண்டும்.
============================================
உற்பத்தியோடு இணைந்த போனஸ் வழங்கும் விவகாரத்தில் தற்போதைய போனஸ் குழுவின் செயல்பாடுகளை மாநிலச்செயலர்கள் கூட்டம் பாராட்டுகிறது. வரும் தீபாவளிக்குள் சாதகமான முடிவு எட்டப்பட வேண்டும். அவ்வாறு எட்டப்படாத பட்சத்தில் மத்திய சங்கம் போராட்ட அறிவிப்பு செய்திட வேண்டும்.
============================================
ஊழியர்கள் பெயர் மாற்றக்குழுவின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது. அதே நேரம் அதிருப்திக்கு ஆளான SR.TOA தோழர்களின் பெயர் மாற்றம் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும். NE-10ல் உள்ள தோழர்கள் துணைக்கண்காணிப்பாளர்கள் என்றும், NE9ல்உள்ளதோழர்கள்உதவிக்கண்காணிப்பாளர்கள் என்றும் அழைக்கப்பட வேண்டும்.
============================================
இந்தியத் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசின் மோசமான தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து செப்டம்பர் 2ல் நாடு முழுக்க நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் NFTE முழுமையான பங்கு பெற வேண்டும்.