தேர்வுகளும்... குழப்பங்களும்
28/08/2016 அன்று நடக்கவிருந்த JTO இலாக்காத்தேர்வும்..
JAO 10 சதக் காலியிடங்களுக்கான தேர்வும்
24/09/2016 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
28/08/2016 தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்
13/08/2016 என அறிவிக்கப்பட்டது. அப்போதே
தேர்வு தள்ளிப்போகலாம் என்ற செய்தி உலவியது. ஆனால் சங்கங்கள் தேர்வைத்
தள்ளி வைக்க கூடாதென்று நிர்வாகத்திடம் வாதிட்டன. தோழர்களும் அதை நம்பி
விடுப்பு எடுத்து தேர்வுக்குத் தயாராகி... பல தோழர்கள் சென்னைக்கும் சென்று
விட்டனர். தேர்வுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் போது தேர்வைத் தள்ளி
வைப்பது தோழர்களின் ஆர்வத்தைக் கெடுப்பது போலாகிவிட்டது.
ஒரு தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேதியைத் தள்ளி வைக்கும் போதே
தேர்வு உரிய நேரத்தில்
நடக்குமா? இல்லையா ? என்பதை வரும் காலத்திலாவது நிர்வாகம் சரி வர சொல்ல
வேண்டும். இப்போதெல்லாம் நிர்வாகம் என்ன நினைக்கிறதோ... அது மட்டுமே
நடக்கிறது...
தோழர்கள்... மனம் தளராமல் தேர்விற்கு மீண்டும் தயாராகவும்...