Wednesday 15 February 2017

 கோழிக்கோடு தேசியக் குழுக் கூட்டம் 


உறுப்பினர் எண்ணிக்கையில் குறைவாக    இருந்தாலும் சங்கப்பற்று மிக அதிகம் !!     என்பதை  நிரூபிக்கும் வகையில்  மாநிலச் செயலர் தோழியர் லத்திகா அவர்களின் தலைமையிலான    கேரள மாநில சங்கத்தின் உற்சாகமிகு வரவேற்போடு நடந்த தேசிய செயற்குழுசரியான தருணத்தில் மனந்திறந்த   விவாதங்களை நடத்தி     பயனுள்ள  தீர்மானங்களையும் முடிவுகளையும்   நிறைவேற்றி
வருங்கால செயல்பாட்டிற்கு திட்டமிட்டுள்ளது. 

மாநாட்டை துவக்கிவைத்து  AITUC  அகில இந்திய   செயலர்  தோழியர் அமர்ஜித் கௌர்  அவர்கள் ஆற்றிய உரை மிகுந்த எழுச்சிமிக்க உரையாக அமைந்தது. அனைத்து  பொதுத்துறை நிறுவனங்களை அழித்தொழிக்க மோடி சர்க்கார் மேற்கொள்ளும்நடவடிக்கைகளையும் தெளிவாக விளக்கினார்.SEWA BSNL சங்க பொதுச் செயலர் தோழர்  N.D. ராம்,  TEPU சங்க துணை பொதுச் செயலர் தோழர் விஜயகுமார்  ஆகியோரின் உரை சிறப்பானதாக அமைந்தது.        
ஊதிய மாற்றம் பற்றிய அணுகுமுறையை தீர்மானிக்க தோழர் இஸ்லாம் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் தோழர்கள்  மதிவாணன், நடராஜன் ஆகியோர் பங்கேற்க
உள்ளனர்.  
Image may contain: 3 people, people on stage and people standing
Image may contain: 8 people, people standing